search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கட்டிடம்"

    • ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டில் உத்தரவு பிறப்பித்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் பொது நலமனு ஒன்விறை தாக்கல் செய்திருந்தார்.அதில் அவர் கூறியிருந்த தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல், பூச்சிக்கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகளுக்கும், மகப்பேறு சிகிச்சைகளுக்கும் இங்கு உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தைத்தான் நம்பி உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மிகவும் பழுதடைந்து காணப்படு கிறது. மேலும் மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இங்கு பணிபுரியக் கூடிய செவிலி யர்கள் கூட மருத்துவ மனைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆர்.எஸ். மங்களம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை செய்த போது மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மருத்துவ மனை கட்டிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் மருத்துவ மனை கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வுக்கு வருவது தெரிந்து பல இடங்களில் பூச்சு, பெயின்ட் வேலைகள் நடந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அது தொடர்பாக பதில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தர விட்டனர்.

    அதன்படி குடும்ப நல சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் 1989-ம் ஆண்டிலிருந்து ஆர்.ஸ் மங்கலம் சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.தற்போது சேதமடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது.

    மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவசர தேவை கருதி பொது சுகாதார பிரிவு கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டு பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சுகாதார நிலை யத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, படுக்கை வசதியுடன் கூடிய உள் நோயாளிகள் பிரிவு இ.சி.ஜி. எக்ஸ்ரே மற்றும் பிரசவ வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அய்யப்பன் எம்.எல்.ஏ. புகார் கூறினார்.
    • தரம் இல்லாத கம்பி, மண், சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டப்படவில்லை.

    திருமங்கலம்

    மதுரை அருகே உள்ள செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி யில் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.

    இங்கு போதிய இடவசதி இல்லாததால் நபார்டு வங்கி மூலம் ரூ.55 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு பயன் பாட்டுக்கு கொண்டுவரப்பட் டது. இந்த கட்டிடத்தில் உள்ள வகுப்பறை கட்டிடத்தின் ஒரு அறையில் கடந்த வாரம் முதல் மாண வர்கள் பயின்று வருகின்ற னர்.

    மற்றொரு அறையில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்ப தற்காக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவா ளருமான அய்யப் பனிடம் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தி ருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுப்ப தற்காக அய்யப் பன் எம்.எல்.ஏ. புதிதாக கட்டப் பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்தபோது கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆசிரி யர்களிடம் மாணவர்க ளின் பாது காப்பற்ற சூழல் உள்ளதால் மாணவர்களை வகுப்பறைக் குள் அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். தொடர்ந்து அய்யப்பன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

    உசிலம்பட்டி சட்ட மன்றத்திற்கு உட்பட்ட 10-க் கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளில் கூடுதல் வகுப் பறை கட்டிடங்கள் கட்டுவ தற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்ட போது தரம் இல்லாத கம்பி, மண், சிமெண்ட் மற்றும் கட்டு மான பொருட்களைக் கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டப்படவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் முதல மைச்சருக்கு தரமான கட்டிடங்கள் கட்ட வேண்டு மென கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் செயற்பொறியாளர் கட்டி டங்கள் தரமான முறை யில் கட்டப் பட்டதாக பதில் கடிதம் அனுப்பி யிருந்தார்.

    இந்நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் வேண்டுமென பள்ளி சார்பில் எனக்கு கோரிக்கை வைத்தனர். இதற்காக ஆய்வு செய்ய வந்தபோது அனைத்து சுவர்களும் விரிசல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பன்னியான் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது.
    • நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டுக்குட்பட்ட நந்தாநகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால் இடப்பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி தனியார் பங்களிப்புடன் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டார். இதன் பயனாக போயம்பாளையம் ரோட்டரி சங்கம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர முன்வந்தது. இதை தொடர்ந்து 8-வது வார்டுக்குட்பட்ட நேரு நகரில் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதன் திறப்புவிழா நடைபெற்றது. விழாவுக்கு போயம்பாளையம் ரோட்டரி சங்க தலைவர் முத்துராஜ், 8-வது வார்டு கவுன்சிலர் வி.வி.ஜி.வேலம்மாள் காந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். ரோட்டரி நிர்வாகிகள் தனசேகரன், ஆனந்தராம், மெல்வின்பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முடிவில் ரோட்டரி திட்ட தலைவர் ராஜன், பொருளாளர் ஜெகதீஷ்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

    விழாவில் தி.மு.க. பாண்டியன்நகர் பகுதி செயலாளர் ஜோதி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.சரவணன், இந்திய ஜனநாயக கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பாரிகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது.
    • தென்காசி வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், செங்கோட்டை தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.ரஹீம் கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரில் உள்ள பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது. இங்கு உள்ள விருந்தினர் ஆய்வு மாளிகை கட்டிடம் மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பது எங்களது பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மேலும் ஆய்வு மாளிகை கட்டிடம் அமையும் பட்சத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே புதிய கட்டிடம் அமைவதற்கு தாங்கள் ஆவணம் செய்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
    • பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டியன்கோவில் ஊராட்சியில் தாயம் பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார துணை நிலையத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்ப ட்டுள்ளது. இதன் திறப்பு விழா காங்கேயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதா ரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தாயம் பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல்.எஸ்.குமார், கண்டியன் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர் .

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் துளசிமணி சண்முகம், லோகு பிரசாந்த் மற்றும் பெருந்தொழுவு ரவி,அர்ச்சுணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், டாக்டர். சாம்பால், சுகாதார ஆய்வாளர் கந்த சாமி மற்றும் சுகாதார துறை மருத்துவர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ராஜபாளையம் பஸ் நிலையத்தில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
    • இதில் நகரசபை தலைவர் பங்கேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் டவுன் பஸ் நிலையமான பழைய பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிக்காக இடிக்கப்பட்டு மறு நிர்மாணம் செய்யப்படுகிறது. தற்பொழுது முழுவதுமாக இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் பூமிபூஜையை நடத்தி வைத்தார்.

    ஆணையாளர் பார்த்தசாரதி, துணைதலைவர் கல்பனா குழந்தைவேலு மற்றும் கவுன்சிலர்கள், பொறியாளர், இளநிலை பொறியாளர், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக கட்டுமானத்தை முடிக்க வேண்டும் என்று நகரசபை தலைவர் வலியுறுத்தினார். 

    • அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
    • மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும். அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கினார்.

    இதில் மத்திய தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் உள்ள திரு.வி.க. நகரில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

    பின்னர் 58-வது வார்டு ஆரப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தை திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்க ளை பெறுகின்ற வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதா ரர்களுக்கு அத்தியாவசிய பொருட்க ளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் குரு மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கட்டிடம் விபத்து குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேரில் ஆய்வு செய்தார்
    • பின்னர் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மொடக்குறிச்சி:

    சோலார் அருகே மோள கவுண்டன் பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 120 மாணவர்களும், 112 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் தலைமை ஆசிரியை உள்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் மோள கவுண்டன் பாளையம் அரசு நடுநிலைபள்ளியில் பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிட அறையை காலை வழக்கம்போல் ஆசிரியர்கள் திறந்து வைத்தனர்.

    அப்போது ஜன்னல் அருகே உள்ள சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    உடனே அந்த அறையில் செயல்பட்டு வந்த 6-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை அருகில் உள்ள ஸ்மார்ட் வகுப்பிற்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்து படிக்க வைத்தனர்.

    தற்பொழுது அந்த பழமை வாய்ந்த பள்ளி கட்டிடம் பல இடங்களில் விரிசல் விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

    மேலும் தலைமை ஆசிரியை இருக்கும் அலுவலகத்தின் அறையின் கட்டிடமும் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

    இந்த கட்டிடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் பலமுறை பள்ளி ஆசிரியர்களும், பொது மக்களும் பள்ளி கட்டிடத்தை புதுப்பித்து தருமாறு பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    இந்நிலையில் கட்டிடம் விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    பின்னர் கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • வகுப்பறை கட்டடம் இன்றி மாணவ ர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர்.
    • கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி, கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.

    இதை அறிந்த நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கட்டும் பணி தொடங்கப்பட்டது
    • கங்கைகொண்ட சோழபுரம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கங்கை கொண்டசோழபுரத்தில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டும் பணி, மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், நடைபெற்றது. எம்.எல்.ஏ.கண்ணன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஈஸ்வரன், செயற்பொறியாளர் பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் விஜியலெட்சுமி, உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ச.பரிமளம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, உதவி செயற்பொறியாளர் வாஹிதா பானு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம் (வட்டார ஊராட்சி), அமிர்தலிங்கம் (கிராம ஊராட்சி), ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.என்.ரவிசங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன், உதவி பொறியாளர் கெ.குமார், ஜெயங்கொண்டம் வேளாண்மை அட்மா குழு தலைவர் இரா.மணிமாறன், தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதிமுத்து கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
    • பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே ஜக்கம்மாள்புரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

    இந்நிலையில், அங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில், ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அங்கு செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வந்து, பள்ளியில் 81 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பழைய நிலையில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

    அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும், வள்ளி நாயகிபுரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு எம்.எல்.ஏ. விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    தொடர்ந்து விளாத்திகுளம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வீரபாண்டியபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் அனைத்து துறைகள் பங்கேற்கும் சிறப்பு முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, முதல்-அமைச்சரின் மானாவாரி வேளாண்மை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.2500 மதிப்பிலான நியூட்ரிசாப் பயிர் பூஸ்டர் டானிக் மற்றும் கம்பு செயல் விளக்கத்திடல் திட்ட பயனாளிகளுக்கு ஹெக் டருக்கு ரூ.6000 மதிப்பிலான இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி பேசினார்.

    வேளாண்மை உழவர் நலத்துறை நலத்துறை சார்பில் கருத்து கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. முகாமில் விவசாயிகளிடம் தேவை குறித்த மனு பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன், வேளாண் உதவி இயக்குநர் கீதா, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகப் பிரியா, லக்கம்மாள், ஜக்கம்மாள்புரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் சிவகுரு, செயலாளர் பார்த்திபன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பா ளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
    • பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, புலிப்பாறைப்பட்டி, குண்டாயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திட்டப்பணிகள்

    தாயில்பட்டி ஊராட்சி யில் கலைஞர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தி கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மயான பணிகளையும், கல்லமநாயக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    மேலும், புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ஜெ.ஐ.சி.ஏ. திட்டத்தின் கீழ் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.

    பின்னர் குண்டா யிருப்பு ஊராட்சி, சுப்பிர மணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டப்பட உள்ள பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி இயக்குநர் (தணிக்கை) அரவிந்த், வட்டாட்சியர் ரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×